*நீ மட்டும் தான்* ***************** மனக்கண்ணில் தோன்றும் முக்காலுக்கும் சற்று அப்பால் தோன்றும் அத்தனை காட்சிகளும் உன்னைப்பற்றியதே.. காலுக்கும் சற்று குறைந்து காணும் தோற்றங்களைக்கூட நீயே ஆக்கிரமித்து நிற்கிறாய்... அரையாய் தெரியும் பிம்பங்களையும் சேர்ந்தே ஆட்சி செய்து துன்புறுத்துகிறது உன் நினைவு... வேறெதுவும் நுழைந்துவிடாமல் நீ நடத்தும் சூழ்ச்சி நாடகத்திலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதெப்படி... மலர்விழி